ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் இணைந்து தயாரித்து உள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. கதாநாயகனாக விஜய் சேதுபதி, கதாநாயகியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இவர்களுடன் கலா மாஸ்டர், பிரபு, கிங்ஸ்லி போன்ற பலர் நடித்து இருந்தனர்.

அது மட்டும் இல்லாமல் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரைலர், டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகமாகியது. இரு தினங்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல தேவி திரையரங்கில் நேற்று ரசிகர்களுடன் படத்தை பார்க்க விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் சென்றிருந்தார்கள். படத்தை பார்த்தபின் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்கள். தற்போது இணையத்தில் அந்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha (@Samanthaprabhu2) / Twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *