முதல்வருடன் ராக்கிபாய் திடீர் சந்திப்பு !! பின்னணி என்ன ?

கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ராக்கிபாய் யாஷ் அவர்கள் தன் மனைவியுடன் கோவா முதலமைச்சரை சந்தித்து உள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 ஆயிரம் கோடி வசூல் செய்தது. தங்கள், பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த வகையில் நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் 2 இணைந்துள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக மனைவியுடன் கோவா சென்றார் நடிகர் யாஷ். அங்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மனைவியுடம் நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை கோவா முதல்வர் தன்னுடைய சோசியல் மீடியாவில் அப்லோடு பண்ணியுள்ளார்.

நடிகர் யாஷ் அவர்கள் கோவா வந்திருப்பதை அறிந்த முதல்வர் அவரைப் பார்க்க விரும்பியதாகவும் அதனால் ராக்கி பாய் போய் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சந்தித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடிகர் யாஷ் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதிகமாக கோவாவில் நடைபெற இருப்பதாகவும் அதற்கு பர்மிஷன் கேட்பதற்காக யாஷ் அவர்கள் கோவா முதல்வரை சந்தித்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *