‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் மாதவன் படம்!

மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி படம் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மத்திய அரசின் கலாசார துறை ராக்கெட்டரி படத்தை தேர்வு செய்து கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருகிற 19-ஆம் தேதி சர்வதேச பிரபலங்கள் முன்னிலையில் இந்த படம் திரையிடப்படுகிறது. இதுகுறித்து மாதவன் கூறும்போது,”நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்.

படத்தை உருவாக்கும் போது நம்பி நாராயணன் கதையை கதையை மட்டும் சொல்ல விரும்பினேன். தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு அறிமுக இயக்குனராக இது எனக்கு அதிக பதட்டத்தை தருகிறது. இந்த படம் இந்தியாவை பெருமைப்படுத்தும்’ என்றார்.

இதில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம் உளியிட்ட பல மொழிகளில் ராகேட்டரி படம் வெளியாக இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதாகி பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பினாராயணன் வாழ்க்கை உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் நம்பி நாராயணனாக வயதான தோற்றத்துக்கு தன்னை மாற்றிக்கொண்டு மாதவன் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *