முகநூலில் அவதூறு பரப்பிய நபர் மீது புகார் அளித்த மஞ்சுவாரியர்!

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர், தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து இருந்தார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில், நடிகை மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சணல் குமார் சசிதரன் கூறும்போது, ‘நான் மஞ்சுவாரியரை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனாலும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின்னர் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் நான் மஞ்சுவாரியரிடம் பேச முற்பட்டபோது, வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுவிட்டனர்.

மஞ்சுவாரியரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சு வாரியரை பிளாக் மெயில் செய்கின்றாரோ என்ற சந்தேகம் உள்ளது. என தெரிவித்து இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் மஞ்சுபவாரியர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடுவதாகவும் சணல் குமார் சசிதரன் மீது புகார் அளித்தார்.

இந்த புகார் மீது எர்ணாகுளம் இளமக்கார போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழக கேரள எல்லையான பாறசாலையில் சணல்குமார் சசிதரனை நேற்று கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *