விஜய்பாபு சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு!
பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மயக்க மருந்து கொடுத்து பல தடவை பாலியல் பாலத்காரம் செய்ததாக இளம் நடிகை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விஜயபாபு துபாய் தப்பி சென்று விட்டார். நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
விஜயபாபுவுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவரது பாஸ் போர்ட்டை ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கொச்சி போலீசார் கடித்தம் அனுப்பினார். அதை ஏற்று அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது விசாவும் ரத்தாகும் என்பதால் துபாயில் உள்ள விஜயபாபுவை ஐக்கிய அமீரக போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் அங்கிருந்து ஜானர்ஜியாவுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க அர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியாய் போலீசார் நாடி உள்ளனர். இந்த நிலையில் 21-ஆம் தேதிகுள் விஜய்பாபு சரணடையாவிட்டால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.