ஒரு ஆப்பிள் 100 ரூபாய் – பிரபல நாட்டில் ஏற்பட்ட பரிதாபம்
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.
இதனை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது.கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு சகஜ நிலைமைக்கு வருவது கடினம்.
அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அரை கிலோ மீன், 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எனவே, கோழிக்கறியை வாங்கிவிட்டு வருவதாக ஒருவர் கூறியிருக்கிறார்.
அதேபோல அதிக பணம் கொடுத்து குறைவான அளவில் தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆப்பிள் ஒன்றின் விலை, 105 ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்று ஒருவர் கூறியிருக்கிறார்.