கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடில்லை…ஐசிஎம்ஆர் தலைவர் தகவல்!
கொரோனா பரவலுக்கு எதிரானப் போராட்டத்தில் முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுவது தடுப்பூசி ஆகும்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.
வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.