ஓய்வை அறிவித்த டி-காக்…அதிர்ச்சியடைந்த பட்லர்..!
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின் டன் டி-காக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். அவரது இந்த திடீர் முடிவு ஏமாற்றமளிப்பதாக இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
டி-காக் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து சீக்கிரத்திலேயே ஓய்வு பெற்று விட்டேன் என அவர் தெரிவித்தார். டி-காக் மற்றும் அவரது மனைவி சாஷா இருவரும் அவர்கள்ன் குழந்தையின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
டி-காக் ஓய்வு குறித்து ஜோஸ் பட்லர் கூறியிருப்பதாவது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டி-காக் நீண்ட நாட்கள் விளையாடுவார் என நினைத்தேன். அவர் ஒரு சிறந்த வீரர். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் அபாரமாக இருக்கும். அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த கிரிக்கெட் உலகம் அவரது பேட்டிங்கை மிஸ் செய்யும் எனக் கூறியுள்ளார்.