பந்து வீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ்..!

ஐபிஎல் 15-வது சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று 7:30 மணிக்கு இரண்டாவது போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டு பிளசிஸ் அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *