பள்ளி மாணவர்களுக்கு ஒரு கவலை தரும் தகவல்..!
தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு முழுவதுமாக கொரோன பெருந்தொடரின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
சற்று இயல்பு நிலைக்கு மாறிவரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த வருட தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு தேர்வுகள் நேரடியாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்த செய்தி மாணவர்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கியது. பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வு தேதி ஒத்தி வைத்து நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறைந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எந்த மாற்றமும் இல்லாமல் படங்கள் முறையாக எடுக்கப்பட்ட பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.