கிழக்கு ரயில்வே பணிகளுக்கான அறிவிப்பு வெளியீடு..!

கொரோனா காலகட்டம் அதிக வேலையின்மை நிலையை ஏற்படுத்தியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உடைய இளைஞர்கள் பலருக்கு கூட இது ஒரு சிக்கலான கால  கட்டமாகத்தான் இருந்தது. தேர்வுகள் ஒத்திவைப்பு பலரின் கனவுகளை விட்டு வேறு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளியது. 

அப்படி வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு  இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை  உண்டாக்கும். 

ரயில்வே துறையில் வேலைக்கு செல்ல  வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கிழக்கு ரயில்வே கேப்டன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி 10ம் வகுப்பு 
வயது வரம்பு 65 வயதிற்கு குறைவாக 
வருமானம் 18,000 முதல் 25,000 வரை 

  323 காலியிடங்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ளன. லக்னோவில் 188 காலியிடங்கள் உள்ளன, மீதமுள்ளவை இசாத்நகரில் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு பதிவு செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் வடகிழக்கு ரயில்வேயின் (NER), ner.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *