இன்றே நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடக்கத்திலே 4 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் மசோதாவும் பின்னர் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா மற்றும் திருமண வயதை 21 ஆக மாற்றும் மசோதா, தேர்தல் சீர்திருத்த மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் அனுமதிக்க வலியுறுத்தியும், லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் தந்தையான ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியுடன் நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், திட்டமிட்டபடி அணைத்து மசோதாவும் நிறைவேற்றப்பட்டு விட்டதால் முன்கூட்டியே இன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.