அப்செட்டில் ராமதாஸ்… ஆதரவு கரம் கொடுத்த விஜயகாந்த்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் மிகுந்த வருத்ததில் உள்ளனர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சாதிவாரியான கணக்கெடுப்பை ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் முறையாக நடத்திய பின்னரே என கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது தேர்தலுக்காகவும் கூட்டணிக்காவும் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தேர்தலுக்கு முன்பே நான் சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது.

இருப்பினும் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, அனைத்து தரப்பு மக்களும் தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *