தந்தை பெரியார் நினைவு தினம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Periyar

தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை சிம்சனில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதற்கு முன்னதாக பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பக்கத்தில், ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் விடுதலைக்கான வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்! என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *