விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை?… அமைச்சர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

திமுக அரசின் மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நேற்று சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில், இனி அனைவரும் பவர் கட்டுக்கு பழகி கொள்ள வேண்டும், ஏனென்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை கொடுத்துள்ளது என குற்றச்சாட்டினார்.

காலையில் அண்ணாமலை பேசிய பேச்சுக்கு, மாலைக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த கேள்வியை அவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணியிடன் கேட்பதற்கு பதிலாக எங்களிடம் கேட்கிறார்.

மேலும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அண்ணாமலை 24 மணி நேரத்தில் நிரூபிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *