#BREAKING செம்ம ஷாக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி… ஒரே போடாய்போட்ட தமிழக அரசு!
நீட் விலக்கு மசோதாவில் சட்டமன்ற மாண்பை கேள்விக்குறியாக்கும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து தேநீர் விருந்தை ஆளும் கட்சி திமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை , தமிழக அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சட்டப் பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை 208 நாட்களுக்கு பிறகும் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பாத நிலையில் ஆளுநரை இன்று சந்தித்து அது குறித்து வலியுறுத்த ப்பட்ட தாகக் கூறினார்.
ஆளுநர் ஆர் என் ரவி , சட்ட மசோதாவை அனுப்பி வைக்க கால வரையறை எதுவுமில்லை என்று கூறியதாகவும், சட்டமன்ற மாண்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அவரின் நடவடிக்கைகள் உள்ளதாக தெரிவித்தனர்.
கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் , தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராதது வருத்தமளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஆளுநர் எந்தவித ஒப்புதலையும் உத்தரவாதத்தையும் கொடுக்காத நிலையில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் தேனீர் விருந்தையும், சிலை திறப்பு நிகழ்ச்சியும் புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.