மாலைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால்… ஒன்றிய அரசைக் காட்டி முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!
இன்று மாலைக்குள் முதல்வர் மன்னிப்பு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் என்ற இடத்தில் விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஆளுநர் கார் மீது போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடியை வீசியதால் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று மாலைக்குள் முதல்வர் மன்னிப்பு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் பதவி விலக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தி விரைவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.