தீயாய் நடக்கும் வேலை… “திக்.. திக்..” டென்ஷனில் இபிஎஸ்- ஓபிஎஸ்!

-மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையான விசரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு விசாரணை நேற்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

வரும் ஜூன் 24-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அவகாசம் நிறைவடையும் நிலையில், விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமை அடுத்து நடக்கப்போவது என்ன என திக் திக் டென்ஷனுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *