வெறுப்பு அரசியல் வேண்டாம்..!!! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முக்கிய அதிகாரிகள்..!!

பாஜக அரசியலில் கடைப்பிடிக்கப்படும் வெறுப்பு அரசியலை உடனடியாக தடுக்க  வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியா முழுவதும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களன  அசாம், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, உத்தர பிரதேசம்  போன்ற பல மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மை சமூகங்கள் தாக்குவது அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக  வன்முறைகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் நாட்டில்  அச்சுறுத்தும் அதிகாரம் வளர்த்து விடுமோ என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 

அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையெனில் நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் வேகமாக அழித்துவிடும் என குறிப்பிட்டு டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் என 100 மேற்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதிய தங்களின் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்த உள்ளனர். 

நாடு முழுவதும் வெறுப்பு நிறைந்த அழிவின் வெறித்தனத்தை பார்க்கிறோம் இது நமது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளது. இதில் அழிவது முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் மட்டுமல்ல  நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் தான் என குறிப்பிட்டுள்ளனர். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற அவரது  வாக்குறுதியை குறித்தும் இந்த கடிதத்தில் எழுதி முடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *