வெள்ளை அறிக்கை கேட்ட வானதி சீனிவாசன்… அதிரடி உத்தரவு போட்ட சபாநாயகர்!

மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் தெரிவித்தார்.

மின்சார துறை மானியக்கோரிக்கை விவாத்தில் பேசிய வானதி சீனிவாசன், கோயமுத்தூர் நகரை சுற்றியும் குளங்கள் அதிகமாக இருப்பதாவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றப்பட்டாலும், இத்திட்டதில் 23 சதவீதம் பயனாளர்கள் சரியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், பேரவையில் பல முறை மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிலுவை தொகை வாங்கி தர வேண்டும் என்கிறார்கள். அதனால், மாநில அரசுக்கு எந்தெந்த துறையில் எவ்வளவு நிலுவை தொகை மத்திய அரசு வழங்கவேண்டியது குறித்த தகவல்களையும் தரவேண்டும் என்றார். அதோடு மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு மதுவிலக்கு கொண்டு வரவேண்டுமென்று வலியுறுத்திய வானதி சீனிவசான், பல ஆலோசனைகளை அரசுக்கு முன் வைத்த நிலையில் மது தொடர்பாக பேசி அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *