பொதுத்தேர்வு எழுத முகக்கவசம் கட்டாயமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது: குழந்தைகளின் திறமையை கண்டறியும் பணி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. பெற்றோர்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள் என்றார்.

மேலும் 5 ஆம் தேதி பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை
என்றும், விருப்பம் உள்ளவர்கள் அணிய வேண்டும் எனதான் அறிவுறுத்த பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதலாகும்.

தற்போதைய புதிய வழிகாட்டுதலில் தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசு அமைத்த பிறகு முதல்முறையாக தேர்வு நடத்துகிறோம்.
கத்திரிவெயில் உள்ளநிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நிறைய பள்ளி குழந்தைகள் ஆல் பாஸ் செய்யுங்கள் என கேட்கும் போது கூட,நான் ஆல்பஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன். கட்டாயம் தேர்வு தான் என் நிலைபாடு. மாணவர்கள் நலன் கருத்தி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை தமிழகத்தில் மூட அரசு விரும்பவில்லை. எனவே ஒரு மாணவர் படித்தாலும் பள்ளி இயங்கும் என்றார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார். தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடைவிடுமுறை அளிப்பது குறித்து நாளை முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *