கற்பழிப்பு, கஞ்சா, பவர் கட்… திமுக ஆட்சியில் எல்லாம் கெட்டு, குட்டிச்சுவரா போச்சு – ஈபிஎஸ் காட்டம்!
விக்னேஷ் மரணத்தை சிபிஐ-க்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். விக்னேஷின் உடற்கூறு ஆய்வில் அவரின் உடலில்13 இடங்களில் காயம், ரத்தக்கசிவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால், சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும். தமிழக காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறாது.
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு அரசியல் நோக்குடன் இந்நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதினம் இது தொடர்பாக கருத்து தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அவர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார். திமுகவின் ஓராண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலத்திலிருந்து கஞ்சா கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிக்கப்பட்ட அறிவிப்புகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகின்றது. இந்த ஓராண்டுகால திமுக அரசு திறமையற்ற அரசு என விமர்சித்தார்.