என்னது!! தக்காளியால் தக்காளி காய்ச்சல் பரவுமா..? – ராதாகிருஷ்ணன் விளக்கம்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக பீதி அடைய வேண்டாம் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள 5- வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்காளை பரிசோதனை செய்ததில் தக்காளி காய்ச்சல் எனும் புதிய வகை காய்ச்சல் கண்டறியப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தக்காளி காய்ச்சல் என்பது புதிய வகை வைரஸ் என்றும் இதனால் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை கேரளாவி மேலும் இரண்டாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இந்த பாதிப்பு ஏற்ப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நுண்கிருமிகளில் பல்வேறு வகை நுண்கிருமிகள் இருப்பதாகவும் தக்காளி வைரஸ்  சிக்கன்குனியா போன்றுதான் இருப்பதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்..

குறிப்பாக 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் வருவதால் தக்காளி காய்ச்சல் என பெயர்சூட்டியதாக அவர் தெரிவித்தார். இதனிடையே தக்காளிக்கும் தக்காளி காய்ச்சலுக்கு தொடர்பு இல்லையென்றும் இதனால் தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *