பொறியியல் கலந்தாய்வு எப்போது? … அமைச்சர் பொன்முடி விளக்கம்

நீட் தேர்வு முடிந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி , அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கலந்தாய்வு தொடர்பாக கல்வியாளர்கள் உடன் கல்வியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்

ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பொறியியல் கலந்தாய்வுக்கு செல்போனில் விண்ணப்பிக்கும் முறை யும், படித்த பள்ளிகளேயே கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கலந்தாய்வுக்கு 100 இடங்களில் விண்ணப்பிக்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *