தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்… ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம்!

Governor

தமிழக ஆளுநரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள்,மாநில அரசின் மதிக்காத போக்கு, ஜனநாயக அமைப்புகள் குறித்து ஓசூர் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியை நடத்தினர்.

தமிழக ஆளுநரை கண்டித்து கிண்டி ரேஸ் கோர்ஸில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் தொடங்கியது. இப்பேரணியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது அன்சாரி,மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆளுநரின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெல்லை முபாரக்:-

நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து ஒரே நாடு ஒரே அமைப்பு என அனைத்தும் முனைகளையும் மையப்படுத்தும் மத்திய பாஜக அரசு மிக வேகமாக செய்து கொண்டிருக்கிறது.

ஆளுநர்களைக் கொண்டு ஒரு மாநில அரசின் செயல்பாடுகளில் தடுத்து வைப்பது,மாநில அரசுகள் உரிமைகளைத் தர மறுப்பது என்பது போன்ற கூட்டாட்சிக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் ஆளுநர் நியமிக்கப்பட்ட பிறகு தமிழர் விரோத நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர்.பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஆளுநர் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநரின் நடவடிக்கை வரம்பு மீறாமலும், கூட்டாட்சித் தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தில் சுயாட்சி கேடு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையில் தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

கல்வியில் சமூக நீதியை சீர்குலைத்து குலக்கல்வித் திட்டம் திணிக்கும் ,புதிய கல்விக் கொள்கையின் பரப்புரை சக்தியை வலம்வருவது,பாசிச இந்து சித்தாந்தக் கொள்கை பிரச்சாரங்களை மேடையேற்றுவது,
சமூக ஜனநாயக அமைப்புகள் குறித்து அவதூறுகளை மேற்கொள்வது உள்ளிட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஆளுநர் செய்து வருகிறார்.

தமிழ் விரோத நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளை முடக்கும் ஆளுநர் அவர்கள் இதுபோன்ற விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஆளுநரை திரும்பப்பெறும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *