2100 வது வருஷம் வரை நடக்காத ஒரு சம்பவம் நாளைக்கு நடக்க போகுது – மக்களே ரெடியா இருங்க

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நாளை நடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா தெரிவித்தது “இந்த சந்திர கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இருக்கும்.இந்த சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவில் 97 சதவீதம்  சிவப்பு நிறமாக காணப்படும்.

நாளை நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணம் வட அமெரிக்க மாகாணங்களுக்கு தெளிவாக தெரியும். மேலும், இது போன்றதொரு சந்திர கிரகணம்  அடுத்த 2100-ம் ஆண்டு வரை நிகழ போவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கிரகணமானது ,புதன் இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு சந்திரன் முழுமையாக தோன்றும்.

பூமியின் முழு நிழல் அதிகாலை 2:18:41 மணிக்கு நிலவின் மேல் பகுதியில் விழத் தொடங்குவதால் சந்திரன் மிக மங்கலாக தெரியும்.” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *