புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு
பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பரானா மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆராய்ச்சியில் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரேசில் தேசிய அருங்காட்சிய இயக்குனர் அலெக்சாண்டர் கெல்னர் கூறியபோது “இது மிகவும் அரிதான ஒரு கண்டுபிடிப்பு. ஏனெனில் இதுவரை அறியப்படாத ஒரு டைனோசர் வகையை சேர்ந்தது இந்த டைனோசர். இவ்வகை டைனோசர்கள் பெர்தசவ்ரா லியோபோல்டினே என அறியப்படுகிறது.
இந்த டைனோசர்கள் சுமார் 7 முதல் 8 கோடி வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவையாகும் . மேலும் இந்த டைனோசர்கள் 80 சென்டி மீட்டர் உயரமும் ஒரு மீட்டர் நீளமும் கொண்டிருக்கும் . இந்த வகை டைனோசர்கள் வாழ்நாள் முழுவதும் பற்கள் இல்லாமல் வாழ்ந்து உள்ளது” என்று அவர் கூறினார்.இதற்கிடையில் இந்த வகை டைனோசர் இனத்துக்கு பிரேசிலிய விலங்கியல் ஆர்வலர் பெர்தா லூட்ஸ் மற்றும் ராணி மரியா லியோபோல்டினா ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.