தமிழ்நாட்டின் திருப்புமுனை… செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் திருப்புமுனையாக அமையும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பட்ஜெட் உரையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார். அதில், ‘சதுரங்க ஒலிம்பியாட்’ செஸ் விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்ற சதுரங்க ஒலிம்பியாட் ஆகும். பல நாடுகள் இந்த போட்டியை நடத்த கடும் போட்டி நிலவியது. இந்தியாவில் இந்தபோட்டியை நடத்த ஒருமுறை கூட அனுமதி கிடைக்காத நிலையில், முதன் முறையாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் நடைபெற உள்ளன” என அவையில் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் முன்னணி செஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையில் மாபெரும் திருப்புமுனையாக அமையும். நடப்பு நிதி ஆண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.