அதிக கட்டணம் கேட்கும் பேருந்துகளை புகாரளிக்க புது நம்பர்!

தீபாவளி பண்டிகை வருகின்ற 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர்ந்து 4 நாட்கள்  விடுமுறை வருவதால் பலர்  சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர் .

இதனையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், அவர்களின் வசதிக்காக நேற்று முதல் 2,100 பேருந்துகள் உடன் 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இரண்டு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது

பேருந்துகளின்‌ இயக்கம்‌ குறித்து அறிந்து கொள்வதற்கும்‌ மற்றும்‌ இயக்கம்‌ குறித்து புகார்‌ தெரிவிப்பதற்கு ஏதுவாக, 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும்‌ இயங்கும் என்றும். 

மேலும்‌, ஆம்னி தனியார் பேருந்துகளில்‌ அதிக கட்டணம்‌ வசூல்‌ செய்தல்‌ உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *