தீபாவளி பண்டிகை போனஸாக இ-ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனம்
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். குறிப்பாக தீபாவளிக்கு ஊழியர்களுக்கு சம்பளம் தருவதோடு மட்டுமல்லாமல் இனிப்புகள், பட்டாசுகள் போன்றவை தரப்படும்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த சுபாஷ் தேவர் என்பவர் ஆடைத் தொழில் நடத்திவருகிறார். இவரது நிறுவனத்தில் 35 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுபாஷ் தன்னுடைய 35 ஊழியர்களுக்கும் ஸ்கூட்டர்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சுபாஷ் கூறுகையில் “அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை காரணத்தினால்தான் ஸ்கூட்டரை எங்கள் ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வழங்கி உள்ளோம்” என்று தெரிவித்தார். இது போன்ற செயல்கள் மிகவும் வரவேற்கத்தக்க செயலாகும். ஊழியர்களுக்கு போனஸாக பணம் தருவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஊழியர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் சாதனங்களை வழங்குவதும் முக்கியத்துவமாகும்.