ரோந்து பணியில் இருந்த காவலருக்கு நேர்ந்த விபரீதம்!

Police

மதுரையில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்பேட்டை அருகே வெங்காய மண்டிக்கு அருகில் கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடை பழைமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விளக்கு தூண் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் கண்ணன் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காவலர் சரவணனும் கண்ணனும் இடிபாடுகளில் சிக்கினர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு காவலர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தலைமை காவலர் சரவணன் (44) உயிரிழந்தார். விளக்குத்தூண் சட்டம்-ஒழுங்கு தலைமை காவலரான சரவணனுக்கு ஆனந்தி என்ற மனைவியும் காயத்ரி தேவி ,சுகுணா தேவி, என்கின்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர. மேலும் மற்றொரு காவலர் கண்ணன் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *