நீதிமன்றம் முன்பு தவமிருக்கப்போகும் அய்யாக்கண்ணு… ஏன் தெரியுமா?

ayyakannu

ஏப்ரல் 11-ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமைதி வழியில் தவம் இருக்க உள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

தேசிய – தென்னிந்திய நிதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மதுரை காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் கடன்களுக்காக, அவர்களின் நிலங்களை ஏலம் விடக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிபதிகளின் கருணைக்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்பு எப்ரல் 11-ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமைதி வழியில் தவம் இருக்க உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *