துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை… வெளியானது அதிரடி அறிவிப்பு!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் தொடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு

சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான புதிய நான்கு வழிச்சாலையின் கட்டுமானம், பராமரிப்புற்கு நிலம் தேவைப்படுகிறது

இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலை & இணைப்புச்சாலை அமைப்பதனால் நிலம் கையகப்படுத்தும் பணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள், நிலம் கையகப்படுத்துதல் குறித்து தெரிவிக்கலாம்.

ஆட்சேபனைக்குரிய கருத்துகள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலைகள், எழும்பூர் முகவரியில் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *