லாக் அப் மரணம்!! 4 வாரங்களில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
கடந்த மாதம் ஏப்ரல் 18- ஆம் தேதியில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் தீபக் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ், விக்னேஷ் என்ற இருவரையும் சோதனை செய்யதனர்.
அதில் இருவர்களிடம் 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி இருப்பதனை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமானதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சூலில் அவருடைய சடலம் சகோதரிடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ் அவுஸ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியதால் தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக குற்றம்சாட்டினர்.
ஆனால் போலீஸ் தரப்பில் வலிப்பு, வாந்து ஏற்பட்டு விக்னேஷ் உயிரிழந்து இருப்பதாக கூறினர். இதனிடையே விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதில் அளிக்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விக்னேஷ் மரணம் தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.