மாதவரம் ஒன்றிய ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா?… அமைச்சர் விளக்கம்!

மாதவரம் தொகுதி, புழல் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை பெருநகர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு ஆணவ செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு ; மாதவரம் தொகுதி, புழல் ஒன்றியத்தில் உள்ள 13 கிராம ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த உடன், அவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, அவர்கள் ஒப்புதல் தரும் பட்சத்தில், 13 ஊராட்சிகளையும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்

மாதவரம் தொகுதியில் ரூ.241.36 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் நிறைவடையும்.ஊரக உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின், அவற்றை அருகாமையில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைப்பது பற்றி ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *