இரட்டை கொலை செய்த விவகாரம் : ஓட்டுநரிடம் இருந்து 50 கிலோ தங்கம் பறிமுதல் !!
சென்னை மைலாப்பூர் துவகாரா காலணியை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர். இவர்கள் தனது மகள் பிரசவத்திற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற நிலையில் நேற்று காலை சென்னை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மகள் சுனிதா உறவினர்களிடம் கேட்டு உள்ளார். இதையடுத்து அவரது உறவினர் ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்று பார்த்தப்போது வீட்டில் ரத்தக்கரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனிடையே மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நேபாளத்தைச் சேர்ந்த லால் கிருஷ்ணா கார் டிரைவர் அழைத்து வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அதோடு லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி சென்னையை விட்டு தப்பிச்சென்றதை ஜிபிஎஸ் மூலம் அறிந்த காவல்துறையினர் அவர்கள் ஆந்திரா மாநிலத்தில் நெருங்குவதை அறிந்து கொண்டு தகவல் அளித்துள்ளனர். பின்னர் ஆந்திரா போலீசார் லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி அந்த காரில் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களிடம் 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும், லால் கிருஷ்ணா வயதான தம்பதியினர் வீட்டில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.