கீழடி 8-ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு !!
கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் இடைவெளிகள் இன்றி முதுமக்கள் தாழிகள் நெருக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கீழடியில் பிப்ரவரி 13- ஆம் தேதியும் அகரம் கொந்தகையில் மார்ச் 30-ஆம் தேதியும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தது. தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்றது.
இந்நிலையில் 8-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு 30 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் கட்ட அகழாய்வில் தாழிகள் நெருக்கமாக இருந்ததால் முழுமையாகவும் சேசமடையாமலும் இருந்தன.
குறிப்பாக தாழிகளில் சுடுமண் பாத்திரங்களும் கிடைத்தன. இதனிடையே இடைவெளியின்றி தாழிகள் புதைக்கப்பட்ட காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்ய உள்ளதாக தெரிகிறது.
மேலும், தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாழிகளுக்கு இடையே உள்ள தூரத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் பின்னர் தாழிகளில் உள்ள பொருட்களை வெளியில் எடுக்கும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.