தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..? வெளியானது அதிரடி அப்டேட் !!

School

தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான தேதிகள் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே 10,11,12 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 1 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் நிறைவுப்பெற்றுள்ளது.

இந்த சூழலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் எழுதும் பணி தொடங்க இருப்பதாகவும், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், வருகின்ற ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *