சிலிண்டருக்கு மானியம் வழங்க முடியாது: கைவிரித்த அதிகாரிகள் !!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில் அதற்கு மானியம் வழங்கும் திட்டம் தற்போது வரையில் இல்லையென அரசு தரப்பில் கூறப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இந்தியாவில் பொருளாதர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே வீட்டு உபயோக சிலிண்டர் விலை இந்த மே மாதத்தில் சென்னையில் இருமுறை உயர்த்தப்பட்டு தற்போது ரூ1018 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர்ந்து இருக்கும் நிலையில் சிலிண்டர் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் கொரோனா காரணமாக சிலிண்டருக்கு வழங்கப்பட்டுவந்த மானியம், குறிப்பாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சிலிண்டர் விலை சரிந்ததின் காரணமாக விலை குறைந்தது. கடந்த 2020- ஆம் ஆண்டு அப்போது சிலிண்டர் விலை ரூ.569 என்ற அளவில் இருந்தது.

ஆனால் அதன் விலை இதுவரையில் இல்லாத அளவிற்கு ரூ.1018- ஆக விற்பனையாகிறது. இதனால் சிலிண்டருக்கான மானியம் வழங்கும் திட்டம் தற்போதைய வரையில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 37% உயர்ந்துள்ளது.

அதே போல் உள்நாட்டில் அதன் விலை 11 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மானியங்கள் வழங்குவது என்பது பொருளாதர வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இதற்கு உதாரணம் தற்போது இலங்கையில் ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் மானியம் வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *