கோலாகலமாக தொடங்கியது ஐய்யனார் கோவிலில் வைர தேரோட்ட திருவிழா !!
புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டி ஆண்டியப்பன் ஐயனார் கோவிலில் வைரத்தேரோட்ட திருவிழாவையொட்டி தேர் வலம் வரும்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவும் காட்சி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனுர் அருகில் உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் பழமையான ஐயனார் கோவிலாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் தேரோட்ட திருவிழா சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலையில் தற்போது கடந்த ஆண்டில் புதிய தேரை 1.5 கோடியில் அப்பகுதி மக்கள் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு வைரத் தேரோட்ட விழா நடைபெறுவதால் இதனை விமர்சையாக கொண்டாடும் விதமாக ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து தேரோட்டத்தில் மலர்தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வைர தேரோட்ட விழாவில் ஐய்யனாரை தரிசிப்பதற்காகவும், மலர் தூவும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவும் 30- மேற்பட்ட கிராமமக்கள் இருந்து குவிந்துள்ளனர்.
மேலும், வைகாசி மாதங்களில் பொதுவாக அம்மன் கோவில்களில் மட்டும் தான் திருவிழா நடைபெறும். ஆனால் பழமையான கோவில் என்பதால் ஆண்டியப்ப ஐய்யனார் கோவிலில் வைர தேரோட்ட திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.