பட்டினப்பிரவேசம் என்பது ஆன்மீகம்: இதில் அரசியல் செய்யக்கூடாது!!- ஆதீனம்..
பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா என்றும் இதில் அரசியல் கலக்காதப்படி பாதை வகுக்கப்பட்டு இருப்பதாக தருமபுரி ஆதின மடாதிபதி வலியுறுத்தி இருக்கிறார்.
தருமபுர பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணோலி நிகழ்ச்சியில் பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக நிகழ்வு என்றும் இதனை அரசியல் ஆக்காமல் கொண்டுசெல்ல வேண்டும் என ஆதினம் பாதை வகுத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் இவ்விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்றும் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்டு இருக்கும் காணோலியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்றுவரும் குருபூஜை விழாவின் கடைசி நாளான இன்று இரவு சிவிகை பல்லத்தில் ஆதினத்தை அமர வைத்து மனிதர்கள் சுமக்கும் நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது.
இதனிடையே சிவிகை பல்லக்கில் வீதி உலாவும் தொடர்ந்து நியான கொளுக்காட்சியும் நடைபெற உள்ளது. பட்டனிப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு பிறகு விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 600-மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.