தமிழகம் வரும் துணை ஜனாதிபதி !! எதற்காக தெரியுமா ?
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிய நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக திமுகவின் ஆட்சி சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சிலை வைத்தல் போன்ற நிகழ்வுகளை திமுக நடத்தி வருகிறது.
அந்த வகையில் சென்னை ஒமந்தூராரில் அமைந்திருக்கும் தோட்ட வளாகத்தில் சுமார் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். இது தொடர்பாக அண்மையில் தமிழகமுதல்வர் ஜூன் 3 -ம் தேதி அரசு விழாவாக அறிவித்தது மட்டுமில்லாமல் இதனை கொண்டாடவும் வழிவகை செய்தார்.
இந்நிலையில் சுமார் 16 அடியில் உருவாகும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலைக்கு 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது ஒமந்தூராரில் அமைந்திருக்கும் கருணாநிதியின் சிலை திறக்க வருகின்ற 28-ம் தேதி இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தமிழக கட்சி பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதாக அரசிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், அந்நாளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.