தூத்துக்குடி சந்தை: வரலாறு காணாத விலையில் வாழைத்தார்கள்!!
தூத்துக்குடி வாழை சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் உயர்ந்துள்ளது.
மாவட்டமாக சாகுபடியாகும் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் தூத்துக்குடி மாநில சந்தை மூலமாக மாநிலம் முழுவதுமாக விற்பனைக்காக அனுப்பிவைக்கப் படுகின்றனர். வரத்து குறைவு மற்றும் வைகாசி மாதங்களில் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இந்த சந்தையில் வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு வாழை இலை 5000 வரையில் உயர்ந்துள்ளது. இதே போல் வாழைத்தார்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட கற்பூரவள்ளி வாழைத்தார் தற்போது 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாட்டுவாழைத்தார் 400 முதல் 700 வரையில் விற்பனையாகிறது.
கோழிக்கோடு வாழைத்தார் 200 முதல் 400 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்த நிலையில் தற்போது வாழை சாகுபடி சூடு பிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.