45-வது கோடை விழா: இன்று மாலையுடன் நிறைவு !!
தமிழகத்தில் ஏழைகளில் அரசி என அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்தாண்டு கோடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி. கடந்த மே 25-ஆம் தேதி கோடைவிழா தொடங்கி கலைக்கட்டியது. குறிப்பாக சுற்றுலாப்பணிகளை கவரும் வகையில் 5 லட்சம் மலர்கள் கொண்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுட்டது.
இந்த கோடைவிழாவில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழம் கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு விதமாக அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே சுமார் 8-நாட்கள் கோடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிறைவுப்பெற உள்ளது.
தற்போது இந்த கண்காட்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாகவும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமானோர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 6 நாட்களாக சுமார் ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.