கள்ளக்காதல் விவகாரம்: தட்டிக்கேட்ட கணவர் குத்தி கொலை !!
மதுரை கீரைத்துறை சேர்ந்த ராஜேஸ்குமார் அலுமினிய பட்டறையில் கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா காலத்தில் மதுரை வண்டியூரை சேர்ந்த மருது சூர்யா மாநகராட்சி ஒப்பந்ததாரர் அடிப்படையில் கீரைத்துறை பகுதிக்கு மருந்து தெளிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது ராஜேஸ்குமார் மனைவியிடம் விவரங்கள் சேகரித்தப்போது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் போனில் பேசி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தற்காலிக கால் சென்டரில் ராஜேஷ் குமார் மனைவிக்கு மருது சூர்யா வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
வேலைக்கு சேர்த்ததை பயன்படுத்தி அவருடன் அடிக்கடி பேசியது மட்டுமில்லாமல் பாலியல் வன்புணர்வில் அத்துமீற முயற்ச்சி செய்ததாக தெரிகிறது. அடிக்கடி போனில் பேசியதை ராஜேஷ்குமார் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருது சூர்யா ராஜேஷ் மனைவியை தொடர்பு கொண்டபோது போனை ராஜேஸ் எடுத்துள்ளார்.
அப்போது இனிமேல் தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருது சூரியா தனது நண்பர்கள் இருவருடன் நேற்று அதிகாலை ராஜேஸ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராஜேஸ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரைத்துறை போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருது சூர்யா, சந்தோஷ், தக்காளி சதீஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.