ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து 10 சிலைகள் மீட்பு!
ஆஸ்திரேலியா,அமெரிக்கா நாடுகளுக்கு கடத்தப்பட்டு சமீபத்தில் மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் இருந்து கடந்த காலங்களில் கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா,அமெரிக்கா நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்த சாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டு சமீபத்தில் மத்திய அரசு மீட்டது.
மீட்கப்பட்ட 10 சாமி சிலைகளை மத்திய அரசு சமீபத்தில் தமிழக அரசிடம் ஒப்படைத்தது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 10 சாமி சிலைகளை டெல்லி சென்று பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து துவாரபாலகர், நடராஜர் சிவன் பார்வதி, விஷ்ணு, குழந்தைப்பருவ சம்பந்தர் உள்ளிட்ட 10 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டு வந்தனர்.
சென்னை வந்தடைந்த சாமி சிலைகள் , தஞ்சாவூர்,திருநெல்வேலி நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் 10 சிலைகளும் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது நீதிமன்றம் மூலம் 10 சாமி சிலைகளும் அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.