ஜனவரி 31ஆம் தேதி ஒரு குட் நியூஸ் இருக்கு – புதிய இணைய சேவை வழங்கப்போகும் ஸ்டார்லிங்க்
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரான எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு செயற்கைக்கோள் மூலமாக இணைய வசதி கொடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் இருக்கும் கிராமங்களுக்கும் ஸ்டார்லிங்க் மூலம் இணைய வசதியை தர முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஸ்டார்லிங் இணைய வசதியை பெற யாரும் முன்பதிவு செய்ய கூடாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய வசதியை அமல்படுத்த அரசிடம் முறையான ஒப்புதல் பெறவில்லை என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது.
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க பிராண்ட்பேன்ட் சேவையை 99 டாலர் விலையில் ப்ரீ புக்கிங் முறையில் முன்பதிவு செய்ய அனுமதி அளித்து வந்தது. இதை விதிமீறல் என அறிவித்து ஒன்றிய டெலிகாம் அமைச்சகம் இச்சேவைக்குத் தடை அறிவித்துள்ளது.இந்நிலையில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஜனவரி 31, 2022க்குள் ஸ்டார்லிங்க் சேவையை இந்திய மக்களுக்கு அளிப்பதற்கான உரிமத்தை பெற விண்ணப்பம் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்டார்லிங்க் இந்கியா-வின் தலைவர் சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் சேவை மட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் இந்திய அரசிடம் இறக்குமதி வரியில் சலுகை வேண்டும் எனக் கோரிக்கை வைத்த போதும் இந்திய அரசு சில முக்கிய நிபந்தனைகளை விதித்தது வரிச் சலுகை அளிக்க மறுப்புத் தெரிவித்தது.இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அதிகப்படியான வரியில் தான் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இந்தியாவில் டெஸ்லா கார்களுக்குப் பணக்காரர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு உள்ளது.