அசத்தல் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோ E32S ஸ்மார்ட்போன் !!
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமாக இருக்கும் மோட்டோரோலா புதிதாக மோட்டோ E32s என்ற போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன்கள் இந்தியாவில் இருக்கும் ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிளிப்கார்ட் போன்ற கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த E32s ஸ்மார்ட்போன்கள் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் வடிவங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வலதுபுறத்தில் வால்யூம் ராக்கரைக் கொண்டு, பவர் பட்டனுடன் பிங்கர் பிரிண்ட் இணைக்கப்பட்டதால் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த போனின் கீழ் பகுதியில் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் கிரில் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யு.ஸ்.பி. டைப் சி போர்ட் அமைக்கப்பட்டுள்ளதால் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போனானது 6.5-இன்ச் HD+ IPS LCD பேனலைக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB மெமரி வெரியன்டில் உள்ளதால் அதிகமான பதிவேற்றங்களை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. மேலும், இவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த போன்களின் விலை ரூ. 9,299 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை ஆகுவதால் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.