‘ஹலோ ஸ்டாலின் பேசுறேன்’… திடீர் ஆய்வில் முதல்வர்!

MK Stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும், வெள்ள நீரை மோட்டர்கள் மூலமாக அகற்றும் பணியிலும் மாநகராட்சி அலுவலகர்கள், தீயணைப்பு துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் மழையால் சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் 4ஆவது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள அதிகாரிகளிடம் மழை குறித்து வந்த புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய அகிலா என்ற பெண் ஒருவரது அழைப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். சொல்லுங்க அம்மா நான் ஸ்டாலின் பேசுறேன்…. நீங்க நேற்று ஏதாவது புகார் கொடுத்திருந்தீர்களா? என கேட்டறிந்தார். புகார் மீது நடவடிக்கை எடுத்தார்களா? யாராவது வந்தர்களா? என்றும் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *