ரயில் சேவையில் நாளை திடீர் மாற்றம்!
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காணப்படுகிறது. சாலைகள் மட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், நாளை 11.11.2021 (வியாழன்) அன்று புறநகர் ரயில் சேவைகளான ; சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.